பொலிஸ் கான்ஸ்டபிள் காதலியைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை:-ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை:-கொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை!

இலங்கை::தான் நீண்ட காலமாக உயிருக்கு உயிராக நேசித்து வந்த பெண்ணைச் சுட்டுக் கொன்ற புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.புத்தளம் மதுரங்குளியிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று புத்தளம் மதுரங்குளியிலுள்ள அவரது காதலியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட கான்ஸ்டபிளும் அவரது காதலியும் பேசிக் கொண்டிருந்த அறையை யுவதியின் தந்தை திறந்து பார்த்த போது அங்கு இருவரும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை!
கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட பிரதே சபையின் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் இந்திக்க சந்திரசிறி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட இந்திக்க, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மினுவங்கொட கொட்டாதெனிய மாவுஸ்ஸா என்னும் இடத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட இந்திக்க சந்திரசிறிக்கு எதிராக, பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திக்க ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே, முன் விரோதம் காரணமாக இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் மீன் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை!
கொழும்பு 15. முகத்துவாரம் பகுதியில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படும் மீன் வர்த்தகர் கொழும்பின் பாலத்துறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
36வயதான இராஜேந்திரன் முரளிதரன் என்பவரே கொல்லப்பட்டவர் என்ற பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் தாம் பயணம் செய்த முச்சக்கர வண்டியுடன் கடந்த புதன்கிழமையன்று முகத்துவாரம் (மோதரை), எஸ் பி பெர்னாண்டோ மாவத்தை என்ற இடத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டிருந்தார்.
இக்கொலை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாள் தனிப்பட்ட முறுகலே இந்த கடத்தல் மற்றும் கொலைக்கான காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment