Saturday, December 31, 2011

அதிமுகவில் இருந்து சசிகலாவுக்கு நெருக்கமான 8 பேர் அதிரடி நீக்கம்!

Saturday,December,31,2011
சென்னை : சசிகலாவுக்கு நெருக்கமானவர்களான 8 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக ஜெயலலிதா நேற்று நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் கடந்த 19ம்தேதி அதிரடியாக கட்சியை விட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் சசிகலா குடும்பத்தினர் 3 பேர் நீக்கப் பட்டனர். இதுவரை 17பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களான 8 பேரை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் மன்னார்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அசோகன், மன்னார்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ வக்கீல் சீனிவாசன், சிவா. ராஜமாணிக்கம், சிஆர்சி ஆசைத்தம்பி, காசிப்பாளையம் நகர ஜெயலலிதா பேரவை இணைச் செய லாளர் மோகன், கோவை தமிழ்மணி, விஜயகுமார், லியோ என்ற விமல் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment