
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலிபோராளிகள் மேலும் ஒரு தொகுதியினர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கும் வைபவம் மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வுக்குப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உட்பட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுமார் 70 முன்னாள் போராளிகள் ஜனவரி மாதம் 22ம் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment