Monday, August 15, 2016

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்குகின்றது – நாமல் ராஜபக்ஸ!

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது சிறிகொத்தவின் ஓர் கிளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் செயற்பட்டு வருவதாகவும், தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுவதாகத்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment