Wednesday, August 13, 2014

அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருகின்றது: இலங்கை தேசிய புலனாய்வு!

Wednesday, August 13, 2014      
இலங்கை::வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையில் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் மருதானையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதும் வெளிநாட்டு உளவுப் பிரிவினர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவயிலளார்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு ஊளவாளிகள் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினாகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் செய்மதி தொழில்நுட்ப தொடர்பாடல் சாதனங்களின் ஊடாக ஜெனீவாவுடன் தொடர்பு கொண்டு, அனுபவங்களையும் முறைப்பாடுகளையும் பதிவு செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியொருவர் மேற்கொண்டிருந்தார் என தேசிய புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment