Friday, August 8, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளுக்கும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் தொடர்பு கிடையாது: ஜீ.எல்.பீல்ஸ்!

Friday, August 08, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளுக்கும், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டமைக்கும் தொடர்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீல்ஸ் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவிற்கான உறுப்பினர் நியமனத்தின் போது விசேட விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான, செயற்திறன் மிக்கவர்கள் இந்த நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த குழுவினை ஜனாதிபதியே நியமித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சர்வதேச ரீதியான விசாரணைகளாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதே நிபுணர்களின் கடமையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபுணர் குழுவிற்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பதனை வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பணம் செலவழித்து யுத்தம் வென்றெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, யுத்தத்தின் பின்னரான சவால்களை எதிர்நோக்கவும் இவ்வாறு பணம் செலவிடப்பட வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 மக்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட மாட்டார்கள் என அமைச்சர் பிரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்ர்
.

No comments:

Post a Comment