Monday, August 11, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கும் சாத்தியம் இல்லை!

Monday, August 11, 2014
தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கும் சாத்தியம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசாங்கத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை ஒருசேர சந்திக்க எதிர்பார்த்துள்ளது.

இந்த சந்திப்பினை ஒழுங்கு செய்யக்கூடிய கால அவகாசம் ஒன்று தற்போதைக்கு இல்லை என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் மேலும் காலம் தாழ்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்திய விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

No comments:

Post a Comment