Friday, May 2, 2014

பாவம் விக்கினேஸ்வரன் புலி வால் பிடிக்க போய் வந்தத வினை: பிரபாகரனைப் பற்றிக் கதைப்பதற்கு உமக்கு என்ன அருகதை உள்ளது? முதல்வர் விக்கினேஸ்வரனை நையப்புடைத்த புலிகளின் TNA ஆதரவாளர்கள்!

Friday, May 02, 2014
இலங்கை::சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் மேதினத்தின் போது  புலிகளின் தலைவரான பிரபாகரனை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவமரியாதைப்படுத்திப் பேசியதால் அங்கு நின்ற புலிகளின் TNA ஆதரவாளர்கள் அவரைத் தாக்குவதற்குச் சென்றதாகத் தெரியவருகின்றது.  புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தாகவும் அதை மஹிந்த அறியாதவர் அல்ல என்றும்  பிரபாகரன் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டாவது மஹிந்த திருந்த வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை அங்கு கூடியிருந்த புலிகளின் TNA ஆதரவாளர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியது.
 
 
விக்னேஸ்வரன் உரையாற்றியதை அடுத்து அங்கு நின்றிருந்த  புலிகளின் TNA ஆதரவாளர்கள் பலர் ஆத்திமடைந்து  அவாகளிற்சிலர் அவரை தாக்கவும் முற்ப்பட்டனர். நிலைமையை உணாந்த விக்னேஸ்வரன் வாகனத்தில் ஏறி பொலிஸ் பாதுகாப்புடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்ட வேளை அவரை இடைமறித்த இறைஞர்கள்,
 
தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கதைப்பதற்கும் உமக்கு என்ன அருகதை உள்ளது? கொழும்பில் இருந்த உமக்கு எமது தலைவனைப் பற்றிக் கதைப்பதற்கு தகுதி உள்ளதா? எனக் கேட்டு விக்னேஸ்வரன் மீது தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கின்றனர். உடனடியாக விக்னேஸ்வரின் பாதுகாப்புப் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து அவரை மீட்டுச் சென்றதாக அங்கிருந்த செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment