Friday, May 02, 2014
இலங்கை::பாகிஸ்தான் உளவுப் பிரிவின் முகவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பிராந்திய வலயமே கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுடனும், பாகிஸ்தான் அரச உளவுப் பிரிவுடனும் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டிருந்தது. கண்டியைச் சேர்ந்த சாகீர் ஹூசெய்ன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
ஹூசெய்ன், இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதகாவும், இது ஒட்டு மொத்த பிராந்திய வலயத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது துருப்பினரை குறைத்து வருகின்றமை, பிராந்திய வலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபிக்க வழியமைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டு;க்குள் பிரவேசி;ப்பதனை தடுக்க ஓர் பொறிமுறைமை அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment