Wednesday, October 2, 2013

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான கதவு மூடப்படவில்லை: கெஹெ­லிய ரம்­புக்­வெல!

Wednesday, October 02, 2013
இலங்கை::அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் நோக்கில் அவ­சர சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஜன­நா­யக கதவு மூடப்­ப­ட­வில்லை. தேவைப்­படின் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சாத்­தியம் உள்­ளது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
 
எனினும் தற்­போ­தைய சூழலில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடா­கவே அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களை செய்­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்ளோம் என்றும் அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது.
 
13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும் என்­பது தொடர்பில் முன்­வைக்­கப்­படும் விட­யங்கள் குறித்து தகவல் வெளி­யிட்ட ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
எனினும் ஒரு விட­யத்தை தெளி­வாக அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் நோக்கில் அவ­சர சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஜன­நா­யக கதவு மூடப்­ப­ட­வில்லை.
 
தேவைப்­படின் இதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான இய­லுமை உள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­க­மா­னது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் செயற்­பட்­டு­வரும் அர­சாங்­க­மாகும்.
 
எனவே, 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்தம் ஒன்றை மேற்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­படின் அதனை எம்மால் செய்ய முடியும். அதற்­கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும். மக்களுக்கு அவ்வாறான தேவை ஏற்பட்டால் அதனை நாங்கள் செய்வோம்.
 
அதாவது எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜன நாயக ரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்...

No comments:

Post a Comment