Sunday, April 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்- புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர்!

Sunday, April 21, 2013
இலங்கை::புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்படுகிறது.
 
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வ உறுதியான தகவல் வழங்க இன்னும் ஓரிரு வாரங்கள் செல்லும்.என தயா மாஸ்ட்டர் தெரிவித்துள்ளார்,
 
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா இல்லையா என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை.எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இறுதிக் கட்டப் போரின் போது தயா மாஸ்டர் படையினரிடம் சரணடைந்திருந்தார்
 
ஏற்கனவே  புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

No comments:

Post a Comment