Sunday, April 21, 2013

மனோகணேசனுக்கு இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கல் வீச்சினால் கையில் காயம்!

Sunday, April 21, 2013
இலங்கை::மனோகணேசனுக்கு  இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கொண்ட கல் வீச்சினால் கையில் காயம் ஏற்பட்டுள்ளதென அவரது கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.  தற்போது மனோகணேசன்  கொட்டகல வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாக அவர்து கட்சிவ ட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இன்று காலை 10 மணியளவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
 
16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டனர்.
 
இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
 
இரண்டு பிரிவினரும் தங்களுடைய ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment