Thursday, April 4, 2013

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு!

Thursday, April 04, 2013
ராமேசுவரம்::நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அவர்களது பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலில் கரைக்கு திரும்பிய அவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதல் பற்றி புகார் கூறினர்.

No comments:

Post a Comment