Thursday, April 4, 2013

வடக்கு - கிழக்கு மோதல்கள் ஆவணபடம்:

Thursday, April 04, 2013
இலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான பொதுவான ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘பொது நெருக்கடி’ என்ற ஆவணத்திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச மத்திய நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
மோதல்களுக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய காரணிகள் கலந்துரையாடல்கள் ஊடக ஆராயப்படும் அதேவேளை இலங்கையின் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு சமநிலையான ஆய்வுகள் இதன்போது இடம்பெறவுள்ளது.
கடந்த காலங்களில் செனல் போ போன்ற ஊடகங்கள் இலங்கை தொடர்பில் வெளியிட்ட ஆவண காணொளிகள் காரணமாக சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் வெளியாகியிருந்தன.

No comments:

Post a Comment