Thursday, April 4, 2013

புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் என மக்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது கைது!

Thursday, April 04, 2013
இலங்கைபுலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் என மக்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது கைது!
 
புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தா என மக்களை ஏமாற்றி பணம் பறித்த நபரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசியல்வாதி ஒருவின் இணைப்புச் செயலாளரே இவ்வாறு பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
 
குறித்த நபர், தாம் ஓர் புலனாய்வுப் பிரிவு அதிகாரி எனத் தெரிவித்து மக்களிடம் மோசடி செய்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்;தப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்ய முடியும் எனத் தெரிவித்து 500,000 ரூபா முதல் 1000000 ரூபா வரையில் 15 பேரிடம் குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
 
57 வயதான குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment