Wednesday, April 17, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று திங்கட்கிழமை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று திங்கட்கிழமை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது விமான நிலைய சமையலறை மற்றும் ஏனைய பிரிவுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
விமான நிலைய அதிகாரிகளுடனும் விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்களுடனும் அன்புடன் அளவளாவிய ஜனாதிபதி, அவர்களுக்கு மலர்ந்த புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்தத் திடீர் விஜயத்தின் போது அவரது மூத்த புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் உடன் சென்றிருந்தார்.
கதிர்காம தேவாலயத்தில் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று கதிர்காமம் மகா தேவாலயத்துக்குச் சென்று தமிழ்-சிங்கள புதுவருடத்துக்கான ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
மகா தேவாலயத்தததுக்கு வருகை தந்திருந்த பொது மக்களுடன் ஜனாதிபதி உரையாடியதோடு அவர்களுக்கு புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment