Saturday, April 6, 2013

தேசத்துரோகம் இழைத்த ஜே.வி.பி. ஜனநாயக கட்சிகளை இன்று கண்டிக்கிறது!

Saturday,April 06,2013
இலங்கை::சுதந்திர இலங்கையின் ஆயுதப் புரட்சி ஆரம்பமாகி மனித மற்றும் பொருள் அழிவுக்கு வித்திட்ட தினமாக
 
1971ம் ஆண் டின் ஏப்ரல் 4ம் திகதி நம் நாட்டு மக்களினால் வேதனையு டன் நினைவு கூரும் ஒரு நாளாக இருக்கின்றது.
 
இதற்கு முன்னர் இலங்கையில் என்றுமே ஜனநாயக ரீதியில் மக்க ளால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவ ருமே ஆயுதம் தாங்கி, பொலிஸ் நிலையங்களைத் தாக்கி புரட்சி ஒன்றை ஏற்படுத்தவில்லை.
அப்பாவி சிங்கள இளைஞர்களை ஏமாற்றி அவர்களுக்கு இரகசிய மான முறையில் அன்றைய ஜே.வி.பி. இயக்கத்தின் தலைவர் ரோஹண விஜேவீர, கமநாயக்க உட்பட முக்கியத் தலைவர்கள் 5 பாடங்களை கற்பித்து இளைஞர்களின் மனதை மாற்றி ஆயு தம் தாங்கி போராட்டம் நடத்தி அரசாங்கத்தைக் கவிழ்த்தால் மாத்திரமே சிங்கள இளைஞர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று கூறி அவர்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றார் கள்.
 
வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் சாதாரண துப்பாக்கிகளையும், வீடுகளில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளையும் வைத்து ஜே.வி. பி தலைவர்கள் 1971ம் ஆண்டின் ஆயுதப் போராட்டத்தை ஆர ம்பித்தார்கள்.
ஏப்ரல் 5ம் திகதி இரவு அனைத்து பொலிஸ் நிலையங்களையும் திடீரென்று தாக்குவதென்று ஜே.வி.பி தலைவர்கள் போட்டிருந்த சதித்திட்டத்தில் தெய்வாதீனமாக ஒரு சிறு பிழை ஏற்பட்டதனால், இலங்கையில் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப் படுவது தவிர்க்கப்பட்டது.
ஜே.வி.பி தலைவர்களின் திட்டப்படி 5ம் திகதி இரவு பொலிஸ் நிலை யங்களை தாக்குவதற்கான இரகசிய ஆயத்தங்கள் தயார் நிலை யில் இருந்தது. ஆயினும் ஜே.வி.பி. யின் ஒரு குழுவினர் தவறு தலாக ஏப்ரல் 4ம் திகதி இரவு வெல்லவாய பொலிஸ் நிலைய த்தை தாக்கினார்கள்.
இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் சகல பொலிஸ் நிலை யங்களும் இத்தகைய தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தன. பொலிஸாருக்கு இந்த இரகசியம் தெரிந்துவிட்ட விஷயத்தை அறியாது இருந்த ஜே.வி.பி. குழுக்கள் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை இரவில் தாக்கியபோது பொலிஸாரின் பதில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஜே.வி.பி கிளர்ச் சிக்காரர்கள் ஓடி மறைந்தார்கள்.
 
அன்றிரவே பொலிஸாரும், இராணுவத்தினரும் நாடெங்கிலும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான இளைஞர் களை விசாரணையின்றி சுட்டுக் கொன்றார்கள். அதையடுத்து இடை யிடையே மறைந்திருந்த ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை அழித்து விடுவதற்கு அன்றைய பிரதம மந்திரியான ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் கோரிக்கையை அடுத்து இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் பேருதவியாக அமைந்தன.
பிரதம மந்திரி ஸ்ரீமாவோ அம்மையார் தாயுள்ளம் கொண்ட கருணை மிக்கவர் அதனால் அவர் காடுகளிலும், வேறிடங்களிலும் தலை மறைவாகியிருந்த சிங்கள இளைஞர்களை வந்து சரணடையுமாறு அறிவித்தார். பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு அமைய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களிலும் சரணடைந்தனர்.
பின்னர் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக மாத்திரம் குற்றவியல் நீதி ஆணைக்குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
ஜே.வி.பியின் முக்கியத் தலைவர்களான ரோஹண விஜேவீர, கம நாயக்க போன்றவர்களுக்கு ஆணைக்குழு சிறைத்தண்டனையை விதித்து மற்றவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டது. இதற்கமைய ஆயிரக்கணக்கானோர் ஓரிரு ஆண் டுகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போதே இவர்களுக்கு பல்க லைக்கழக பட்டதாரி பரீட்சைகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் அனுமதி அளித்தது.
விடுவிக்கப்பட்டவர்கள் இன்று அரசாங்க சேவையிலும், தனியார் துறையிலும் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள். ஜே.வி.பி தலைவர்களின் சுயநலத்தினால் தங்கள் வாழ்வையே அழித்துக் கொள்ளவிருந்த இவர்கள் ஜனநாயக பாரம்பரியம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டதனால் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
1971ம் ஆண்டின் ஜே.வி.பி தலைவர்கள் மேற்கொண்ட இந்த அராஜ கத்தினால் எங்கள் நாட்டின் தலையெழுத்தே ஒருவேளை மாற் றம் அடைந்திருக்கலாம். இலங்கையில் துப்பாக்கி கலாசாரத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த பொறுப்பை ஜே.வி.பி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜே.வி.பி ஆயுதம் தாங்கி போராட்டம் செய்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்கள் கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்தி வந்தார்கள்.
 
அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் என்றால் என்ன என்று கூட தெரியாது இருந்தது. இந்த ஆயுத கலாசாரத்தை தமிழ் இளைஞர் களுக்கும் அறிமுகம் செய்து அவர்களை அழிவுப் பாதையில் இட்டுசென்ற பொறுப்பையும் ஜே.வி.பி ஏற்றுக் கொள்ள வேண் டும்.
இவ்விதம் எங்கள் நாட்டுக்கு பெரும் துரோகம் இழைத்த ஜே.வி.பி யினர் இன்று அப்பாவிகளைப் போல் நடித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அரசாங்கக் கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளையும் விமர்சித்து தாங்கள் நற் பண்பாளர்கள் போன்று நடிப்பதைப் பார்த்து மக்கள் தங்களுக் குள் சிரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment