Saturday, April 6, 2013

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பில் தெரியாது: இலங்கை கடற்படை!

Saturday,April 06,2013
இலங்கை::சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பில் தெரியாது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை இந்திய கடற்பரப்பில் சஞ்சரித்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் சஞ்சரிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இவ்வாறு சஞ்சரிப்பதற்கு இலங்கை கடற்படையினரிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்திய இலங்கை கடற்பரப்பில் 22 தடவைகள் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் சஞ்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment