Thursday, April 11, 2013

இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி!

Thursday, April 11, 2013
சென்னை::மத்திய மந்திரி நாராயணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பேசினார்.

தமிழக மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்களை பிடித்து, தங்கள் வாழ்வாதாரத்தை தடுப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் புகார் செய்வதால்தான் தமிழக மீனவர்களை கைது செய்வதாக இலங்கை கூறுகிறது என்று தெரிவித்த நாராயணசாமி, இலங்கை தமிழர்களுக்காக, தமிழகத்தில் நாம் போராடுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது முகாம்களில் இருந்த தமிழர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தாங்கள் நம்புவது இல்லை என்றும், தேசிய கட்சிகளைத்தான் தாங்கள் நம்புவதாக அவரிடம் கூறியுள்ளனர் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
 
tamil matrimony_INNER_468x60.gif


No comments:

Post a Comment