Tuesday, April 16, 2013
மெல்பெர்ன்::இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் தம்மை விடுவிக்கக் கோரி அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று கைதுசெய்யப்பட்டு மெல்பர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்கோ அல்லது அவர்களுடன் கலந்துரையாடுவதற்கோ தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார்.
சட்டவிரோத இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலிய சட்டத்திற்கு அமைய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment