Tuesday, April 16, 2013
இலங்கை::பொதுபல சேனா அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்றை விரைவில் யாழ்ப்பாணத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அவ் அமைப்பு தற்போது மேற்கொண்டுவருவதாக அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரே மேற்கண்டவாறு சிங்கள இணையம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான திட்டமொன்றினை நாம் முன்னெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் நாம் யாழ்ப்பாணத்தில் எமது அமைப்பின் அலுவலகம் ஒன்றினைத் திறக்கவுள்ளோம்.
இது தொடர்பான எமது 'சமூக ஐக்கியக் கூட்டம்" எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் வடமாகாணத்துக்கான எமது பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
பௌத்த குருமார்களின் குரல்களை அடக்க முடியாது!
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பௌத்த மதத்தை பாதுகாக்க பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை அவ் அமைப்பு தற்போது மேற்கொண்டுவருவதாக அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரே மேற்கண்டவாறு சிங்கள இணையம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான திட்டமொன்றினை நாம் முன்னெடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் நாம் யாழ்ப்பாணத்தில் எமது அமைப்பின் அலுவலகம் ஒன்றினைத் திறக்கவுள்ளோம்.
இது தொடர்பான எமது 'சமூக ஐக்கியக் கூட்டம்" எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் வடமாகாணத்துக்கான எமது பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
பௌத்த குருமார்களின் குரல்களை அடக்க முடியாது!
பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான பௌத்த குருமார்கள் குரல்களை அடக்க யாருக்கும் இடமில்லை என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பௌத்த மதத்தை பாதுகாக்க பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment