Tuesday, April 23, 2013

பொலிஸ் கட்டளையை மீறி பயணித்த இரண்டு லொறிகள் மீது அம்பாறை தமண பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

Tuesday, April 23, 2013
இலங்கை::பொலிஸ் கட்டளையை மீறி பயணித்த இரண்டு லொறிகள் மீது அம்பாறை தமண பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
 
குறித்த லொறிகளில் சட்டவிரோதமாக மாடுகள் கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
மாடுகளை கொண்டு சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் லொறிகள் இரண்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
சந்கேதநபர்கள் வெல்லவாயவில் இருந்து அக்கரைபற்று நோக்கி 18 மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment