Friday, April 5, 2013

கிரிந்த கடற்படைத்தளம் கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டது!

Friday, April 05, 2013
இலங்கை::கடற்படையினர் தமது கிரிந்த தளத்தை கரையோரப்பாதுகாப்பு படையினரிடம் கடந்த ஏப். 02 ஆம் திகதி கையளித்ததனர். இந்நிகழ்வில் கரையோரப்பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன மற்றும் தென்பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர் ஆவணங்களில் கைச்சாத்திட்டனர்.
 
எனவே கரையோரப்பாதுகாப்பு தலைமையகமானது கிரிந்த பகுதிக்கு மாற்றப்படவுள்ளதுடன் இந்நிலையமானது கடற்படை,மீனவர்கள், துறைமுக அதிகாரிகள் போன்றோர்களின் கடல் சார் சூழலைப்பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடும்.
 
இந்நிகழ்வில் மூத்த கடற்படை அதிகாரிகளும் கரையோரப்பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  

No comments:

Post a Comment