Friday, April 5, 2013

ராகுல் பிரதமராவதை வரவேற்கிறேன் : மன்மோகன் சிங்!

Friday, April 05, 2013
புதுதில்லி::ராகுல் பிரதமராவதை வரவேற்கிறேன். அவர் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
 
புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ராகுல் காந்தி பிரதமர் ஆவதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஆமாம், எப்பொழுதுமே என்று அவர் பதில் அளித்தார்.
 
மூன்றாவது முறையாக நீங்கள் ஆட்சியை பிடிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி என்று கூறினார்.
 
மத்தியில் இரட்டை அதிகாரம் என்ற நிலை இருப்பதாக எழும் புகார் குறித்து கேட்டதற்கு, இது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு என்று கூறினார்.

No comments:

Post a Comment