Friday, April 5, 2013

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது: அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது!

 Friday, April 05, 2013
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 22 அமைச்சர்களும் சில நிறுவனங்களும் கால வரையறைகளை நிர்ணயித்து பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், சர்வதேச சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச ரீதியாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை சமாளிக்கும் ராஜதந்திர முனைப்பாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.
 
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment