Saturday, April 20, 2013

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தங்களின் முதலீட்டு சூழலை சக்திமயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது!

Saturday, April 20, 2013
இலங்கை::இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தங்களின் முதலீட்டு சூழலை சக்திமயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
 
உலக வங்கி வெளியிட்டுள்ள தெற்காசிய நாடுகளின் பொருளாதார வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் வறிய மக்கள் காணப்படுகின்றனர்.
 
இதனால் இலங்கையின் முதலீட்டு சூழல் பாதிப்படைவதாக, உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய பொருளியல் அறிஞர் மார்டின் ராமா தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் தொடர்ச்சியான முதலீட்டு வாய்ப்புகளை இந்த நாடுகள் தக்க வைத்துக் கொள்வதற்கு, தேவையான சக்திமயப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment