Saturday, April 20, 2013
இலங்கை::அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்களில் நான்கு பேர் முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது.
இலங்கை::அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்களில் நான்கு பேர் முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்லத் தயாராகவிருந்த 44 பேர் நேற்று அதிகாலை அளுத்கம - களுவாமோதர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் 5 பெண்களும் 6 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் புலி உறுப்பினர்கள் நால்வரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தபோது மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 61 பேரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment