Saturday, April 20, 2013

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது!

Saturday, April 20, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
 
கடந்த வருடத்தின் மார்ச் மாத இறுதியில் 2064 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அபாயம் நிலவியது.
 
தற்போது 96 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
குறித்த நிலப்பரப்பு காட்டுப் பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment