Thursday, April 25, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான அழைப்பிதழ்களை அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த முறை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இலங்கை விடயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படாத பட்சத்தில் தாம் பொதுநலவாய மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீர் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பிரித்தானியாவின் பிரதமர் டெவிட் கெமரூனும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்துகிடமானதாக இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அதிகபட்ச உள்நாட்டு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment