Thursday, April 18, 2013

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சந்தேக நபர் ஒருவர், சிறையதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்!!


Thursday, April 18, 2013
இலங்கை::மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  புலிகளின் சந்தேக  நபர் ஒருவர், பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரும் போது சிறையதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று  பிற்பகல் 2.30 அளவில் நடந்துள்ளது.
 
கோமாரி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மகிந்தராஜா சசிதரன் என்பவே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இவர் பொத்துவில் பிரதேசத்தில் சில வருடங்களுக்கு முன்னர் 10 பேரை கொலை செய்தமை தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
 
பொத்துவில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், மலசலக் கூடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் காவற்துறையினரும், சிறையதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment