Sunday, April 14, 2013

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியா இலங்கையர்களுக்கான விசேட குடிவரவு புதிய சட்டத்திட்டங்கள்!

Sunday,April, 14, 2013
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியா இலங்கையர்களுக்கான விசேட குடிவரவு புதிய சட்டத்திட்டங்கள்!
 
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியா இலங்கையர்களுக்கான விசேட குடிவரவு சட்டத்திட்டங்களை அறிவிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நாளையதினம் மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேர்ன் பகுதிகளில் தமிழ் சிங்கள புத்தாண்டின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
 
இதன் போது இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று, அவஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதிக அளவில் பாதுகாப்பு வீசா வழங்கல், தங்களின் உறவினர்களுக்கான விசேட தொலைபேசி அனுமதிகள் வழங்குதல் போன்ற விடயங்கள் இதன் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment