Tuesday, April 23, 2013

இதுவரையிலும் ஏழாயிரம் மாணவர்களே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்!

Tuesday, April 23, 2013
இலங்கை::பாடசாலை மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் உரிய நேரத்தில் கையளிக்காத காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இதுவரையிலும் ஏழாயிரம் மாணவர்களே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.
 
ஆயினும் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
இதன் காரணமாக இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தாமதிக்காது மாணவர்களை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விண்ணப்பங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காவிடின் இரண்டு தரப்பினருக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
 

No comments:

Post a Comment