Tuesday, April 23, 2013
ஆலந்தூர்::இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் முகம் மதுரியாஸ் (32). இவர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் இறங்கியபோது அவர் வைத்திருந்த லேப்டாப் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை வாங்கி பார்த்த போது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் காணப்பட்டது.
எனவே லேப்-டாப்பை திறந்து பார்த்தனர். அப்போது தங்க பிஸ்கட்டுகளை தகடாக மாற்றி லேப்-டாப்பில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 6 தங்க தகடுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
600 கிராம் எடை கொண்ட இந்த தங்க தகடின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். முகம்மது ரியாசை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்::இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் முகம் மதுரியாஸ் (32). இவர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் இறங்கியபோது அவர் வைத்திருந்த லேப்டாப் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை வாங்கி பார்த்த போது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் காணப்பட்டது.
எனவே லேப்-டாப்பை திறந்து பார்த்தனர். அப்போது தங்க பிஸ்கட்டுகளை தகடாக மாற்றி லேப்-டாப்பில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 6 தங்க தகடுகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
600 கிராம் எடை கொண்ட இந்த தங்க தகடின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். முகம்மது ரியாசை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment