Saturday, April 20, 2013

இலங்கை சிறையில் உள்ள, 30 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, தங்கச்சிமடத்தில் ஏப்., 22, 27ல் போராட்டம்!

Saturday, April 20, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள, 30 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, தங்கச்சிமடத்தில், ஏப்., 27ம் தேதி, மீனவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கடந்த, 6ம் தேதி, ராமேஸ்வரம் மீனவர்கள், 30 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். ஏப்., 18ம் தேதி, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, விடுதலை செய்யப்படலாம் என, ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மீனவர்களுக்கு, ஏப்., 26 வரை, சிறை காவல் நீடித்ததால், அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, ராமேஸ்வரத்தில், மீனவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் தலைமையில், நேற்று நடந்தது.
 
மீனவர், 30 பேரை விடுதலை செய்யக் கோரி, தங்கச்சி மடத்தில், ஏப்., 22ல் ஆர்ப்பாட்டமும், ஏப்., 26ம் தேதி, மீனவர்களை விடுதலை செய்யாவிடில், 27ல், சாலை மறியல் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவும், இலங்கை கடற்படையினர், சிறைபிடித்த படகுகள் சேதமடைந்ததால், மத்திய, மாநில அரசுகள், மீனவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment