Sunday, April 21, 2013

பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது!

Sunday, April 21, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
 
இதன் போது எதிர்வரும் நொவம்பர் மாதம், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
முன்னதாக இந்த கூட்டத்தின் போது இலங்கை விடயம் குறித்து பேச தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.
 
எனினும் அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதி மாநாட்டின் போது, இலங்கையை அந்த அமைப்பில் இருந்த நீக்க வேண்டும் எனவும், இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்ட பொதுநலவாய மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த நிலையில் எதிர்வரும் அமைச்சர்கள் செயற்குழுவில் இந்த விடயம் குறித்து பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment