Wednesday, June 6, 2012

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Wednesday, June, 06, 2012
காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 31 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பல்வேறு உபயதாரர்கள் மூலம் பெருமாள் வீதி உலா நடந்தது. விழாவின் 6வது நாளாக இன்று காலை தேரோட்டம் நடந்தது.

அதிகாலை 3.30 மணியளவில் பெருமாள் விஷேச அலங்காரத்துடன் கோயிலில் இருந்து புறபட்டு தேரில் எழுந்தருளினார். காலை 5.45 மணிக்கு தேர் புறப்பாடு தொடங்கியது. காஞ்சிபுரம் எஸ்பி மனோகரன் தேர் விழாவை துவக்கி வைத்தார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளான காந்தி ரோடு, காமராஜர் வீதி, நான்கு ராஜ வீதிகள், பூக்கடை சத்திரம், பஸ் நிலையம், நெல்லுகார வீதி வழியாக தேரடி வந்து மதியம் 12.30 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

No comments:

Post a Comment