
Friday, June, 08, 2012இலங்கை:: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 16ஆம் பெணடிக் போப்ஆண்டவரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பாப்பரசருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக வத்திக்கான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
No comments:
Post a Comment