Monday, June 20, 2016

பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்த போதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
இறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார். எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
 போரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment