Tuesday, August 4, 2015

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கஜேந்திரகுமாரின் ஆதரவை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் இருந்து பிரிய முனைவதாக இந்தியாவின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது}}

 Tuesday, August 04, 2015
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் இருந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரிய முனைவதாக இந்தியாவின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே அவர் வடமாகாணத்தின் முதலமைச்சராக தெரிவாகியுள்ளார்.

எனினும் இந்த முறை பொதுத் தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
 

இது கூட்டமைப்பின் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 

அதேநேரம் தமக்கான தனித்துவமான அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டுள்ள அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தரவுகளை மீறி இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை வடமாகாண சபையில் வைத்து நிறைவேற்றி இருந்தார்.
 

இதனை அடுத்து அவர் கஜேந்திரகுமாரின் ஆதரவை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்லவிருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment