Saturday, July 18, 2015

நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல் நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார்: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா!

Saturday, July 18, 2015
நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல் நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
 
மஹிந்த பிரதமர் கதிரைக்குச் செல்வது உறுதி. அவருக்குப் பிரதமராக முடியாது என்று சட்ட ரீதியான கருத்துகளைத் தற்போது முன்வைக்கின்றனர். 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியைவிட பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. சிறிசேனவின் கதிரையில் அல்ல, பிரதமர் கதிரையில்தான் அவர் அமரப்போகிறார். அவர் பிரதமராவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரக்கமான சிறிசேன அல்ல. அவர் வைராக்கிய சிறிசேன. பொறாமை, குரோதமும் மட்டுமே அவரிடம் உள்ளன. மஹிந்தவிடம் அவ்வாறான குணம் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி என்று அறிந்த பின்னர் அலரிமாளிகையிலிருந்து 6 மணிக்கு வெளியேறினார். மைத்திரிக்கு பொறுப்புகளையும் கையளித்தார். அவருக்கு எதிராகத்தான் இப்போது கருத்துகள் கூறப்படுகின்றன.
 
ரணில் விக்கிரமசிங்க புலிகளிடம் மண்டியிட்டு என்ன செய்தார்? சமாதான ஒப்பந்தத்தினூடாக பிரபாகரன் பலமடைந்தார். அவரது பங்கர்கள் அப்படியே இருந்தன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் சம்பூருக்குச் சென்றேன். திருகோணமலை துறைமுகத்துக்கு அருகில் பாரிய கோபுரங்கள் இரண்டு அமைக்கப்பட்டிருந்தன. இது ஏன் அமைக்கப்பட்டது என்று நான் கேட்டேன். புலிகளுக்குத் தொடர்பாடல் மத்திய நிலையமாக நடத்த நோர்வே அரசின் நிதி உதவியுடன் ரணில் விக்கிரமசிங்க இதனை அமைத்துக் கொடுத்துள்ளார். எமது இராணுவத்தினர் எங்கு செல்கின்றனர் என்பது இதனூடாக புலிகளுக்குத் தெரிய வந்தது. இவ்வாறாக எமது நாடு காட்டிக்கொடுக்கப்பட்டது. எனவே, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கி நாட்டைப் பாதுகாப்போம் என்றார்.

No comments:

Post a Comment