Wednesday, December 31, 2014

பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே: அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும!

Wednesday, December 31, 2014
இலங்கை::பொது எதி­ர­ணி­யி­னது நாடக தொடரில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கு­பற்­ற­லா­னது எதிர்­பார்த்த ஒன்றே என குறிப்­பிடும் ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி, பொது எதி­ர­ணி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அமை­வா­கவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு பெறப்­பட்­டுள்­ள­து.

குறிப்­பிட்ட அந்த உடன்­ப­டிக்கை தொடர்­பி­லான இரக­சி­யங்­களை பொது எதி­ர­ணி­யினர் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­வித்­தது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பொது எதி­ர­ணி­யினால் மிக சூழ்ச்­சி­க­ர­மான முறையில் கொண்டு நடத்­தப்­படும் நாடகத் தொடரின் இறு­தி­யாக அங்­கத்­துவம் பெற்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமது கோரிக்­கை­க­ளுக்கு தலை சாய்க்கும் தரப்­பி­ன­ருக்கே ஆத­ரவு வழங்­கு­வ­தாக கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக கூறி வந்­ததை நாம் அறிந்­தி­ருந்தோம். அதன் அடிப்­ப­டையில் எமது கட்சி அவர்­களின் ஈழ கன­வு­க­ளுக்கோ உடன்­ப­டிக்­கை­க­ளுக்கோ தலை சாய்க்க தவ­றி­ய­மை­யி­னா­லேயே இன்று பொது எதி­ர­ணி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இவர்­களின் இம் முடி­வா­னது நாம் எதிர்­பார்த்த ஒன்றே.

எனவே பொது எதி­ர­ணி­யி­னரால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெற மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு தௌிவு­ப­டுத்த வேண்டும்.

குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச கருத்து தெரி­விக்­கையில்;
சுகா­தார துறையில் சில செயற்­பா­டு­களை மேற்­கொள்ள இருப்­ப­தாக தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ள பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் அவர் சுகா­தார அமைச்­ச­ராக பதவி வகித்த காலங்­களில் செய்யத் தவ­றினார் என்­ப­தனை மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்த வேண்டும். வெறு­மனே தேர்­தலை இலக்­காகக் கொண்டு அதை செய்வோம் இதை செய்வோம் என குறிப்­பி­டு­வது அர்த்­த­மற்ற செயல்.

சிங்­கள பௌத்த மக்­களின் வாக்­குகள்

இன்று பொது எதி­ர­ணி­களின் செயற்­பா­டு­க­ளா­னது மும்­மு­ர­மான வாக்­கு­களை பெறு­வதே ஆகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­களை இலக்கு வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை தன் வசப்படுத்தியுள்ளது. மறுபுறம் முஸ்லிம் வாக்குகளை பெற முஸ்லிம் கட்சிகளை வசப்படுத்தியுள்ளது. சிங்கள வாக்குகளை பெறவே சம்பிக்க ரணவக்கவை தன்வசப்படுத்தியுள்ளார்கள். எனவே மக்கள் இவர்களின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிவிட கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment