Friday, December 5, 2014

இன­வா­தி­க­ளென எம்மை விமர்­சிக்கும் எதி­ர­ணி­யினர் இன்று சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வகை­யி­லேயே தமது ஆட்­டத்­தினை ஆரம்­பித்­துள்­ளனர்: விமல் வீர­வன்ச!

Friday, December 05, 2014
இலங்கை::
இன­வா­தி­க­ளென எம்மை விமர்­சிக்கும் எதி­ர­ணி­யினர் இன்று சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வகை­யி­லேயே தமது ஆட்­டத்­தினை ஆரம்­பித்­துள்­ளனர். ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­னரை பொது எதி­ர­ணியில் இணைத்­தி­ருப்­பது சிறு­பான்மை மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் எனத் தெரி­வித்­தி­ருக்கும் அமைச்சர் விமல் வீர­வன்ச சிறு­பான்மை மக்கள் மிகச் சரி­யான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.
 
பொது எதி­ர­ணியின் தேர்தல் நகர்­வுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அர­சாங்கம் இன­வா­தத்­ததை தூண்­டு­வ­தா­கவும் சிறு­பான்மை மக்­களை அடக்கு முறைக்­குள்­ளாக்­கு­வ­தா­கவும் எதி­ர­ணி­யினர் தெரி­விக்­கின்­றனர். ஆனால் நாட்டில் ஆயுதப் போராட்­ட­மொன்று இடம்­பெற்ற போது  புலி­களின் பயங்­க­ர­வா­தத்தின் பக்கம் வடக்கு மக்கள் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்டு ஆயு­த­மேந்த வைக்­கப்­பட்­டனர்.
கிழக்கு முஸ்­லிம்கள் பு­லி­க­ளினால் கொல்­லப்­பட்­டனர். அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் சிறு­பான்மை தமிழ் முஸ்லிம் மக்­களை காப்­பாற்­றி­யது நாங்கள் தான். ஐக்­கிய தேசியக் கட்சி 2004 ஆம் ஆண்டு  புலி­க­ளுடன் ஒப்­பந்­தத்­தினை மேற்­கொண்ட போது நாடு சீர­ழியும் அபாயம் நில­வி­யது. அவ்­வா­றா­ன­தொரு நிலையில் புலி­க­ளுடன் போராடி நாட்டை மீட்­டெ­டுத்­தது நாங்­களே.
ஆனால் இன்று எம்மை இன­வா­தி­க­ளாக சித்­த­ரித்து மக்­களை எமக்கு எதி­ராக திசை திருப்­பு­கின்­றனர். இன்று பொது எதி­ர­ணி­யினர் தமது இன­வாதக் கொள்­கையில் அவர்­களின் செயற்­பா­டு­களை முன்­வைக்­கின்­றனர். சிறு­பான்மை சமூகம் பொது எதி­ர­ணி­யி­னரை நம்பி அவர்­க­ளுக்கு ஆத­ர­வினை வழங்கத் தயா­ரா­கின்­றது. ஆனால் ஜாதிக ஹெல உறு­மய எனும் இன­வாதக் கட்சி இன்று அக்­கூட்­ட­ணி­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது.
என்­பதை சிறு­பான்மை மக்கள் மறந்து விட வேண்டாம். பௌத்த சிங்­கள கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாக வைத்து அவர்கள் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். இவர்­களை நம்பி சிறு­பான்மை மக்கள் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு வாக்­க­ளிப்­பது அச்­சு­றுத்­த­லா­கவே அமையும்.
எனவே தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிகத் தெளிவான சரியான முடிவினை எடுத்து தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment