Monday, August 11, 2014
மேற்கத்தேய பிரிவினைவாதிகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஆட்சி
மாற்ற மொன்றினை ஏற்படுத்தி இலங்கையில் தீர்க்கவே முடியாத
இனப்பிரச்சினையொன்றினை உருவாக்கவே சர்வதேச விசாரணைக் குமுவினர்
முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதே
இவர்களின் குறிக்கோள் எனத் தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க,
இலங்கை அரசு ஒத்துழைக்காவிடினும் இலங்கை மீதான சர்வதேச விசாரணை
இடம்பெறுமென்பது எம் மீதான அத்து மீறிய மனித உரிமை மீறல்கள்
செயற்பாடாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்
யுத்த
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் பலமடையும் என்ற
வகையில் பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் குறிப்பிட்டுள்ளமை
தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி:ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவது அல்ல
எமது நோக்கம். சுயாதீனமான நம்பகத்தன்மையான விசாரணையே அவசியம்
என பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களின்
கருத்து என்ன?
பதில்: ஆட்சிமாற்றம் தமது நோக்கமில்லை என சர்வதேசம்
கூறுமாயின் இலங்கை விடயத்தில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க
வேண்டியஅவசிய மில்லை.எனினும் சர்வதேசத்திற்கு ஏற்ற வகையிலான விலை
போகக்கூடிய அரசாங்க மொன்றினை உருவாக்கி இலங்கையில் தொடர்ச்சியான
குழப்பங்களை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். அமெரிக்கா
பிரித்தானியா ஆகிய மேற்கத்திய பேரினவாத நாடுகள் இன்று மத்திய
கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் தமது ஆதிக்கத்தினை செலுத்துகின்றன.
ஆயினும் அந்த நாடுகளில் இன்று வரையில் பிரச்சினைக்கான தீர்வு
எட்டப்படவில்லை.
குறிப்பாக சொல்வதாயின் இவர்களின் தேவை பிரச்சினைகளை தீர்ப்பதல்ல.
பிரச்சினைகளை வளர்த்து தமது ஆயுத வியாபாரங்களையும்
ஆதிக்கத்தினையும் செலுத்துவதேயாகும்இதனை மேற்கொள்ளும் நோக்கிலேயே
இன்று முயற்சித்து வருகின்றனர். இலங்கைமீது அக்கறையுள்ளவர்களாக
இவர்கள் கதைப்பது வெறும் நாடகமே. பிரிவினை வாதிகளுக்கு ஏற்ற வகையில்
இந்த நாட்டில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்தி தமது தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு உதவும்
வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய
கட்சி-களும் புலம்பெயர் அமைப்புகளும் உதவி செய்து
கொண்டிருக்கின்றன.
கேள்வி:யுத்த குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச
விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காவிடினும் விசாரணை
இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்: யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் இன்று
வரையில் ஒரு பக்க விசாரணையினையே மேற்கொண்டு வருகின்றது. தமிழ்
மக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிப்பவர்கள் சிங்கள மக்கள்
கொல்லப்பட்டமைதொடர்பில் ஏன் பேசவில்லை? இழப்புக்கள்
தமிழர்களுக்கு மட்டுமா நிகழ்ந்தன. எமது நாட்டை சீரழித்து
பயங்கரவாதத்தினை உருவாக்கிய தமிழ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு
குரல் எழுப்புவோர் இந்த நாட்டை கைப்பற்றி நாட்டில் அமைதியை உருவாக்க
உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினர் மீது பழி சுமத்துகின்றனர்.
இன்று நாட்டில் தமிழ் மக்கள் எவ்வித அடக்கு முறைகளுமின்றி
சுதந்திரமாக வாழ்கின்றனர். சிங்கள மக்களுடன் இணைந்து
வாழ்கின்றனர்.
அவ்வாறு இருக்கையில் உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளும் சாட்டில் நாட்டில் தீர்க்கவே முடியாத
இனப்பிரச்சினையினை தோற்றுவிக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும்
யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும்
ஜனாதிபதி ஆணைக்குழுவினர் செயற்படுகின்றனர். இவை திருப்திகரமான
விசாரணைகளாகவே அமையும். புதிதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றினை அனுமதித்து
விசாரணைகளை மேற்கொள்ளவதென்பது தேவையற்ற ஒன்றாகும். இதற்கு அனுமதி வழங்கும்
வகையில் அரசாங்கம் செயற்படாதென்ற நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் அவர்
தெரிவித்தார்.

No comments:
Post a Comment