Sunday, September 29, 2013

வடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி!

Sunday, September 29, 2013
இலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாடு திரும்­பி­யதும் மத்­திய, வடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடை­பெ­று­மென அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­க­ளுக்­கான முத­ல­மைச்­சர்­களை தெரிவு செய்யும் போது, விருப்பு வாக்­கு­ களை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு தீர்­மானம் எடுக்­கப்­பட மாட்­டாது என தெரி­விக் கும் அவ்­வட்­டா­ரங்கள், மத்­திய மாகா­ ணத்­திற்கு சரத் ஏக்­க­நா­யக்­கவும் வடமேல் மாகா­ணத்­தி ற்கு தயா­சிறி ஜய­சே­க­ர­வையும் முத­ல­மைச்­சர்­க­ளாக நிய­மிக்க உள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றன.

சரத் ஏக்­க­நா­யக்க கடந்த முறை மத்­திய மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதே­வேளை இம்­முறை நடை­பெற்று முடிந்த மத்­திய மாகாண சபைத் தேர்­தலில் விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் பிர­த­மரின் புதல்­வ­ரான அநு­ராத ஜய­ரத்ன முத­லா­மி­டத்­திலும் சரத் ஏக்­க­நா­யக்க இரண்­டா­மி­டத்­தி லும் இருக்­கின்­றார்கள்.

அதிக விருப்பு வாக்­கு­களை பெற்­ற­வர்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­படும் என அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­த­தா­கவும் அந்த தீர்­மா­னத்தில் மாற்றம் எதுவும் இல்­லை­யெ­னவும் பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலை­யி­லேயே இந்த புதிய தகவல் வெளி­வந்­துள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னமா செய்­து­விட்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் வடமேல் மாகாண சபைத் தேர்­தலில் தயா­சிறி ஜய­சே­கர போட்டியிட்டார். எனவே அரசாங்கம் வெற்றி பெற்றால் அவரே வட மேல் மாகாணத்திற்கு முதல மைச்சராக தெரிவு செய்யப்படுவார் என்று ஆரம் பத்திலேயே செய்திகள் வெளியாகி இருந் தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment