Saturday, April 20, 2013
இலங்கை::புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை::புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிவில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் மரபு ரீதியான போராட்டத்தையே முன்னெடுத்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதி நவீன ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் யுத்தக் கப்பல்கள் இன்றியே படையினர் வெற்றிகரமாக யுத்தத்தை முன்னெடுத்தாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் நட்பு நாடுகளுடன் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் யுத்த தந்திரோபாயம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் சான்றிதழ்களை வழங்கியிருந்தார்.
No comments:
Post a Comment