Monday, April 22, 2013
சென்னை::தமிழக முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தழிழகத்தின் அய்யனூரில் தங்கியுள்ள இலங்கையர்களே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழகத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும், தொடர்ந்தும் தம்மை அகதிகள் எனக் குறிப்பிடுவதனை விரும்பவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அகதிகள் என்ற நிலையில் அடையாளப்படுத்தும் தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment