Monday, April 15, 2013
இலங்கை::அமெரிக்காவின் தாளத்திற்கு ஆட வேண்டிய அவசியம் கிடையாது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் பொருத்தமானது எதுவோ அதனை அமுல்படுத்தவே அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு நன்மை ஏற்படக் கூடிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டமாக இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவை விடவும் இந்தியா தலையீடு செய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளின் ஒத்துழைப்பை தக்க வைத்துக் கொள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என கொமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment