Monday, April 22, 2013

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக புலிகளின் ஊடகத்துறை முன்னாள் இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்!

Monday, April 22, 2013
இலங்கை::வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக  புலிகளின் ஊடகத்துறை முன்னாள் இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
 
இதனை அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்:-
 
வடமாகாண சபை தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் இன்று உத்தியோக பற்றற்ற செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, வட மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போதைய நிலையில், இரண்டு அரசியல் கட்சிகள் தம்மை அனுகியுள்ளதாகவும் எனினும் தாம் எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு இணங்கும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தயா மாஸ்டர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment