Tuesday, April 16, 2013

நிபந்தனை அடிப்படையில் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது: இந்தியா அறிவித்துள்ளது!

Tuesday, April 16, 2013
சென்னை::நிபந்தனை அடிப்படையில் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்பட மாட்டாது என இந்தியா அறிவித்துள்ளது.
 
இலங்கை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு நிபந்தனை அடிப்படையில்  உதவிகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
 
இருதரப்பு புரிந்துணர்வு அடிப்படையிலேயே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடுகளின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நிபந்தனைகள் விதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இரு தரப்பு நன்மைகளை முதனிலையாகக் கொண்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment