Thursday, April 11, 2013

பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை மென்மைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

Thursday, April 11, 2013
இலங்கை::பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை மென்மைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரவை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
அண்மையில் பிரித்தானியர் ஒருவர் புத்தரின் உருவத்தை பச்சைக்குத்தி இருந்தமைக்காக இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டிருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண அறிவுறுத்தலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
 
இது சுற்றுலாதுறையை பாதிப்படைய செய்யும் என்று அரசாங்கம் கருதுகிறது.
 
இந்த நிலையில் இது குறித்து லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் பிரித்தானியாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment